Posts

Showing posts from March 29, 2009
Image
Image
என் நண்ப ர் ஏ.ஆர்.கே.ராஜராஜா அவர்கள் இப்போது இரண்டு படங்கள் செய்துகொண்டிருக்கிறார். ஒன்று நாசர் ,ரம்பா நடித்து தெலுங்கில் சமீபத்தில் வெளியான "கொத்தகதா " என்றபடம்.தமிழில் புது கதை இதன் பாடல்களை கல்யாண்ஜி (www.kalyanje.blogspot.com ) , உவரி . க . சுகுமார் , பொன்முடி ராயர் ஆகியோர் எழுதி உள்ளனர். மற்றொன்று தெலுங்கில் " ஆந்த்ருடு" என்ற பெயரில் கோ பிசந்த், சாயாஜி ஷிண்டே நடித்து வெளிவந்தது வெற்றி பெற்ற பட ம் . தமிழில் " வேட்டைபுலி" என்று பெயர்வைத்து வசனம் எழுதி தமிழ் படுத்துகிறார் ராஜாராஜா. இந்த படத்தை அவருடன் பார்க்க நேர்ந்தபோது ஒரு விஷயம் மனதை நெருடியது. நான் எழுதிய பதிவில் லங்கா படத்தையும் மலையாளிகளின் மனதை பற்றியும் வருத்தப்பட்டு எழுதி இருந்தேன் . இந்த "ஆந்த்ருடு "படம் பார்த்ததும் இன்னும் மனம் அதிக வேதனை அடைந்து விட்டது. கதைப்படி நாயகன் போலிஷ் அதிகாரி அவன் காதலிக்கும் பெண் மேலதிகாரியின் மகள்.மேலதிகாரி பீகாரை சேர்ந்தவர்.அவரது உறவினரான பிகார் எம் பி சாயாஜி ஷிண்டே இருவரும் ஏதோ பழைய பகையில் பிரிந்து போனவர்கள் .இந்நிலையில் எம்.பி கோதாவரி நதியி