இன்று மார்ச் மாதம் இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை காலை பத்தரை மணிக்கு மேல் பூஜையுடன் ஆரம்பமாகும் ,அனுஷ்கா,சுமந்த்,ஸ்ரீ ஹரி நடித்த " மகா நந்தி" ( தமிழ் டப்பிங் ) படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறோம் . தயாரிப்பாளர் இளங்கோ , இணை தயாரிப்பாளர்கள் வினோத் , கென்னடி மற்றும் வசனம் எழுதி தமிழ்ப்படுத்தும் இயக்குனர் ஏ ஆர் கே . ராஜராஜா , பாடல் எழுதும் கவிஞர் " கல்யாண்ஜி " (www.kalyanje.blogspot.com ), கவிஞர் கருணாநிதி , கவிஞர் சமீரா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . படம் மிகப்பெரிய வெற்றி அடையட்டும் ! நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே !
Posts
Showing posts from March 22, 2009
- Get link
- Other Apps
சமீபத்தில் வெற்றி பெற்ற பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் இயக்குனர் சிகரம் தயாரிப்பில் பரத் ஹீரோவாக வைத்து கதை சொல்லி இருக்கிறார் . கதை கேட்ட கம்பெனியில் ஒப்புதல் சொல்லி விட்டார்கள் . பின் தங்களது கம்பெனி பெயரை சொல்லி பரத்திடம் கதை சொல்லி ஓகே வாங்குங்கள் என்று சொல்லி அனுப்பி உள்ளனர் . சந்தோசமான உதவி இயக்குனர் பரத்தின் மேனேஜரை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி உள்ளார் , கம்பெனியின் பெயரை கேட்டதும் மேனேஜர் தட்டி கழித்துவிட்டாராம் . அது மட்டும் இல்லாமல் உதவி இயக்குனரை நோகடித்து விட்டாராம் . ரஜினி , கமல் எல்லாம் நடித்த பேனரில் பரத் நடிக்க மாட்டாராம் . கொடுமை என்னவென்றால் சமீபத்தில் சரத் குமாரை வைத்து வருடத்தின் பெயரால் சொந்த படம் எடுத்து சுட்டு கொண்ட மலேசிய இயக்குனரை சுற்றி கொண்டிருக்கிறாராம் பரத் மேனேஜர் பரத்தை வைத்து படமெடுக்க சொல்லி . ( மார்க்கெட் இல்லாத நேரத்தில் சரத்குமாரை வைத்து கிட்ட தட்ட பத்து கோடி செலவில் படமெடுத்து ரிலிஸ் செய்ததால் தன்னையும் வைத்து ஆறு கோடியில் பிரமா
- Get link
- Other Apps
இளையதளபதி விஜய் கொஞ்ச நாட்களாக கோபமான மூடில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் . சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பக்கத்தில் பிரபுதேவாவை வைத்து கொண்டு கோபப்பட்டது இன்டெர் நெட் முழுவதும் தெரிந்ததே ! தெரியாத விஷயம் உண்மையில் விஜய் பயங்கர முரண்டு கேரக்டராம் ! தங்களது பேரப்பிள்ளைகளை பார்க்க வாரம் ஒருமுறை கடற்கரை சாலையில் உள்ள விஜயின் வீட்டுக்கு விஜயின் அப்பா சந்திரசேகரும் , அம்மா ஷோபாவும் செல்வது வழக்கம் . அப்போது கூட ஏதோ பட்டும் படாமளும்தான் பேசுவாராம் . இன்னொரு கொடுமை என்னவென்றால் தங்களது பேரப்பிள்ளைகள் வீட்டின் கீழ் பகுதியில் பார்க்க மட்டுமே அனுமதியாம் . மாடிக்கு போக கூடாதாம் . பலவருடங்களாக இப்படித்தான் தொடருகிறதாம் . விஜய்க்கு பெற்றவர்கள் மீதும் உறவினர்கள் மீதும் பற்று இல்லாமல் போனதன் காரணம் புரியவில்லை ! விஜய் தேதி கொடுத்தால் கொடுத்த அன்றே பல கோடிகள் லாபம் என்ற நிலைவந்துவிட்ட பின்னும் தனது தாய்மாமா எஸ் . என் . சுரேந்தர் , கேமராமேன் செல்வா போன்றவர்களுக்கு ஒரு படம் கொடுத்து தூக்க
- Get link
- Other Apps
ஒரு ஆச்சர்யமான விஷயம் . சமீபத்தில் வைகை புயல் வடிவேலுவை ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு அவருடன் போக்கிரி, வில்லு படங்களில் பணிபுரிந்த உதவி இயக்குனர் போயிருக்கிறார்கதை கேட்ட வடிவேலு நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார். சரி சம்பளம் எவ்வளவு என்று கேட்ட உதவி இயக்குனர் பேயறைந்தவர் போல் ஆகிவிட்டாராம்.இதுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம். வடிவேலு எவ்வளவு சம்பளம் கேட்டாராம் தெரியுமா? அஞ்சு கோடி ரூபாய் ! பின் அதிர்ச்சி யடையாமல் என்ன செய்வது? இதில் இன்னொரு ஆச்சர்யம் என்ன தெரியுமா அவருக்கு ஆறு கோடி சம்பளம் கொடுக்க ஒரு கம்பெனி தயாராக இருக்கிறதாம் வடிவேலுதான் நடிக்க மறுக்கிறாராம்! சினிமாக்காரர்கள் நடிக்க வாய்ப்பில்லாததால் இப்படி கேட்கிறார் என்று சொல்கிறார்கள் !வயித்தெரிச்சலாக இருக்குமோ!!!?
- Get link
- Other Apps
"அருந்ததீ" பெற்ற மாபெரும் வெற்றியால் தெலுங்கில் அனுஷ்கா நடித்த படங்கள் எல்லாம் இனி மள,மளவென்று தமிழில் டப்பிங் ஆகும் .அதை நிரூபிப்பது போல் அனுஷ்கா நாகர்ஜூனாவின் அக்காள் மகன் சுமந்த் உடன் நடித்த " மகா நந்தி" படம் தமிழில் டப்பிங் ஆகிறது .நாளை சனிக்கிழமை பூஜையுடன் ஆரம்பம் ஆகும் இந்த படத்துக்கும் வழக்கம் போல் ஏ.ஆர்.கே.ராஜராஜா தான் வசனம் எழுதுகிறார். தமிழில் ரஜினி, மம்முட்டி நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி படத்தின் உல்டா இந்த மகாநந்தி உண்மையில் மகாநந்தி தெலுங்கில் தோல்வியடைந்த படம். அதில் சண்டைக்காட்சிகள் நன்றாக இருப்பதால் தமிழில் முற்பகுதியை பிற்பகுதியிலும், பிற்பகுதியை முற்பகுதியிலும் மாற்றி வெளியிடப்போவதாக ஏ.ஆர்.கே.ராஜராஜா சொன்னார் . உண்மையில் புது முயற்ச்சிதான் வாழ்த்துக்கள்!
- Get link
- Other Apps
தமிழ் சினிமாவில் விரைவில் இசையமைப்பாளராக அறிமுகமாகப்போகும் " பிரபாலினி " ஈழத்தின் மெல்லிசைமன்னர் பரமேஷ் அவர்களின் புதல்வி ! பரமேஷ் அவர்கள் மேடை கச்சேரிகளில் முனைப்பாக இருந்ததால் சினிமாவுக்கு இசையமைக்கவில்லை! ஆனால் பிரபாலினிக்கு தந்தையின் இசையறிவும்,திறமையும் பிறவியிலேயே பரிசாக கிடைத்து இருக்கிறது! இந்த இசை தமிழச்சி விரைவில் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகப்போகிறார்! "அன்று" அவரது தந்தைக்கு கிடைத்த நீங்கா புகழ் உலகிலேயே முதன் முதலாக "தமிழ் பாப்" இசையை உருவாக்கியவர் என்பது! அதுபோல் பிரபாலினி தான் தமிழில் இசையமைப்பாளராகும் முதல் ஈழத்து தமிழ் பெண் என்ற பெருமை அடைவார்! மேலும் மொத்த தமிழ் உலகத்தில் ரைகானாவுக்கு பின் இரண்டாவது தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையும் அடைகிறார்! உண்மையில் பிரபாலினி மிக திறமையானவர் அவரது பாடல்களை கேட்டால்உங்களுக்கே புரியும்! பிரபாலினியின் இந்த முயற்ச்சிக்கு ஆதரவாகவும்,ஊக்கமாகவும் இருப்பவர் ,அவரின் அன்பு கணவர் பிரபாகர் . ( "கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !") ஈழத்து இசைக்குயிலை , தங்க தமிழ் மகளை வா
- Get link
- Other Apps
அருந்ததீ ராமநாரயனின் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் இந்த படம்,தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த படம்.பொதுவாக நமது ரசிகர்கள் டப்பிங் படத்தை பெரிதாக ரசிக்க மாட்டார்கள்.இதுதாண்டா போலிஸ்,வைஜெயந்தி ஐபிஎஸ் ,அம்மன்,போன்ற படங்கள் விதி விலக்கு.சமீபத்தில் நயனதாரா,பிரபாஸ் நடிக்க ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதி வெளிவந்த முரட்டு தம்பி படமும் நல்ல லாபத்துடன் ஓடுகிறது ! இருந்தாலும் இந்த அருந்ததீ படவிசயம் வித்தியாசமானது.இதன் ஒப்பனிங் வசூல் சன்டிவி தரப்பை மிரட்டிவிட்டது.ஏன் இப்படி அருமையான படத்தை கோட்டை விட்டீர்கள் என்று சினிமா பொறுப்பாளர்களை வறுத்து எடுக்கிறார்களாம். (உண்மையில் ராமநாராயணன் தான் டிவியில் அசுர விளம்பரம் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கலாம் என்பதை சன் ட்டிவிக்காரரகளுக்கு கத்து கொடுத்தார் ருத்ரநாகம் படம் மூலம். ) சரி அருந்ததீ படத்துக்கு வருவோம். படத்தின் கதை பாட்டிகள் கதை சொல்லி கேட்டு வளர்ந்த நம் பெண்களுக்கு பிடித்தமான கதை.படத்திலும் பாட்டி மனோரமா தான் கதை சொல்கிறார். படத்தின் விமர்சனம் நிறைய வந்து விட்டதால்,நான் எழுதவில்லை. உண்மையில் நாடு இருக்கும் சூழ்நிலையில் தைரியமாக மத நல்லிணக
- Get link
- Other Apps
லட்சுமிதேவி சினி கம்பைன்ஸ் சார்பில் எம்.புருஷோத்தம ் தயாரித்த நாகார்ஜுனா , திரிஷா நடித்த " பட்டுகோட்டை அழகிரி " படம் அந்த பெயர் வைக்க கூடாது என்று பிரச்சினை செய்து (ஜூனியர் விகடன்) பத்திரிகைகளில் செய்தி வெளியாகி முதல்வர் கவனம ் வரை போனதால் புருஷோத்தம் இப்போது அந்த படத்தின் தலைப்பை "புதுக்கோட்டை அழகன்" என்று மாற்றி உள்ளார்! பரபரப்பை உண்டாக்கிய புது கோட்டை அழகன் அடுத்த மாதம் வெளியாகிறது! இதன் வசனத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா எழுதி உள்ளார்!