Posts

Showing posts from June 21, 2009
Image
படித்தது உங்கள் கருத்துக்காக நன்றி :www.softeccomputer.com இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துகிறோமா? ஏன்?? ஆணை ஆண் புணரும் மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா? ``கடவுள் இல்லை என்பவர்கள் இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துவதா?’’ (`தினத்தந்தி’ ) இப்படியொரு கேள்வியை பா.ஜ.க., தலைவர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்! இப்படி எத்தனையோ கிருஷ்ணர்கள் கேள்விகள் என்ற பெயரிலே மூடர்கள் சிலர்முன் முழங்கி விட்டுப் போகிறார்கள்! தந்தை பெரியார் காலந் தொடங்கி இன்று தமிழர் தலைவர் அவர்களின் அறிவார்ந்த சுனாமி அலைவீச்சின்முன் இன்று வரை ``இதோ நான் காட்டுகிறேன்’ -நான் மறுக்கிறேன்’’ என்று எந்த மார்தட்டும் வீரரும் வந்ததில்லை! இந்துக் கடவுள்கள் எல்லாம் வல்லவர்கள் ஆயிற்றே! அவர்களிடம் ``அவர்கள் தலையில் இடியைப் போடு இந்திரனே!’’என்று வேதங்களில் எழுதி வைத்திருக்கிறீர்களே! அப்படியே விட்டுவிட வேண்டியது தானே?