Posts

Showing posts from November 16, 2008
Image
கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பின் இணையத்துக்குள் வந்து பதிவிடுகிறேன்! என் நண்பர் ஏ.ஆர்.கே.ராஜராஜா அவர்கள் இப்போது இரண்டு படங்கள் செய்துகொண்டிருக்கிறார். ஒன்று நாசர் ,ரம்பா நடித்து தெலுங்கில் சமீபத்தில் வெளியான "கொத்தகதா " என்றபடம். மற்றொன்று தெலுங்கில் " ஆந்த்ருடு" என்ற பெயரில் கோபிசந்த், சாயாஜி ஷிண்டே நடித்து வெளிவந்தது வெற்றி பெற்ற படம் . தமிழில் " வேட்டைபுலி" என்று பெயர்வைத்து வசனம் எழுதி தமிழ் படுத்துகிறார் ராஜாராஜா. இந்த படத்தை அவருடன் பார்க்க நேர்ந்தபோது ஒரு விஷயம் மனதை நெருடியது. நான் போனமாதம் எழுதிய பதிவில் லங்கா படத்தையும் மலையாளிகளின் மனதை பற்றியும் வருத்தப்பட்டு எழுதி இருந்தேன் . இந்த "ஆந்த்ருடு "படம் பார்த்ததும் இன்னும் மனம் அதிக வேதனை அடைந்து விட்டது. கதைப்படி நாயகன் போலிஷ் அதிகாரி அவன் காதலிக்கும் பெண் மேலதிகாரியின் மகள்.மேலதிகாரி பீகாரை சேர்ந்தவர்.அவரது உறவினரான பிகார் எம் பி சாயாஜி ஷிண்டே இருவரும் ஏதோ பழைய பகையில் பிரிந்து போனவர்கள் .இந்நிலையில் எம்.பி கோதாவரி நதியின் சங்கம விழாவுக்கு வரும் பொது அவரின் மகன் தன் உறவினரான