Posts

Showing posts from September 28, 2008
Image
தமிழர்களை பாண்டி, திருடன், பிச்சைக்காரன் ,என்று பழித்து,இழித்து பேசும் மலையாளிகளின் வர்க்கத்தை சேர்ந்த, கவுதம் மேனனுக்கு ஆண்தன்மை உள்ள பெண்கள் மேல் ஏன் அப்படி ஒரு மோகம் என்று தெரியவில்லை! ரீமாசென் , பாம்பே ஜெயஸ்ரீ, அன்டோனியா வரிசையில் இப்போது சமீரா ரெட்டி. ( உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கள்)
Image
அறிவித்து ஒரு வாரம் ஆகிவிட்டது ! ஆனால் யாரும் மின் அஞ்சல் அனுப்பவில்லை ! கராத்தே , போன்ற சண்டை கலைகள் தெரிந்த தமிழ் இளைஞர்கள் பஞ்சமா ??? இதனால் தான் பெங்களூர் போய் ஹீரோக்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது . அப்புறம் இந்த பத்திரிகைகள் தமிழில் ஆட்களே இல்லையா என்று கேட்பார்கள் .!!!! இப்போது பார், ஒருவரும் ஆகியும் யாரும் ஆர்வமாய் வரவில்லை . எந்த மொழிக்காரனாக இருந்தால் என்ன , தகுதியிருந்தால் உபயோக படுத்தி கொள்ள வேண்டியது தான் என்று வருத்தப்பட்டார் என் நண்பர் .( இயக்குனர் ) இன்னும் ஒரு வாய்ப்பு அவர் ஜனவரி மாதம் ஆரம்பிக்க இருக்கிறார் . உங்களுக்கு சண்டைகலைகள் ( கராத்தே , ஜிம்னாஸ்டிக் ) தெரிந்திருந்தால் , உங்கள் முழு விவரங்களுடன் இந்த மின் அஞ்சல் முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும் . தகுதி இருந்தால் கதாநாயகனாக தேர்வு செய்யப்படலாம் . ஏதாவது கேட்க விருப்பபட்டால் கமென்ட் பகுதியில் பதியவும் .. . kng_rr@yahoo.com Get a 10% discount on muveeNow. Click here .
Image
அஜித்தின ் ஏகன் தீபாவளிக்கு வெளியீடு ! அறிவித்து விட்டார்கள் ! இன்று இசை வெளியீடு ! ( வெற்றிக்கு வாழ்த்துக்கள் )
இயக்குனர் பூபதி பாண்டியன் மலைக்கோட்டைக்கு பின்னும் , பெரிய ஹீரோக்கள் யாரும் படம் பண்ண அழைக்காததால் , தன் தம்பி பிரபுவை வைத்து நானும் என் சந்தியாவும் என்று புதுப்படம் ஆரம்பித்து விட்டார் . சேவல் படத்திற்கு பின் இந்த படத்தை ஜின்னா கிரியேசன்ஸ ் தயாரிக்கிறது ! ( அப்போ ஒரு ஹீரோவா உருவாக்குரிங்க ன்னு சொல்லுங்க )
Image
தக்காளி சீனிவாசன் அவர்கள் கொஞ்ச வருடங்களுக்கு முன்னாள் துணை நடிகர் ஸ்ரீ மானை ஹீரோவாக நடிக்க வைத்து " அசோக வனம் " என்று ஒரு படம் எடுத்து வெளியிட்டார் . படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்து விட்டது . இந்நிலையில் சினிமாக்காரர்களின் சம்பிரதாயங்களை உடைத்து எடிட்டர் மோகன் ஜெயம் படத்திற்கு பெயர் வைத்தார் . ஜெயம் என்ற பெயரில் இசாக் ஹுசைனி நடித்து ஒரு படம் ஆறு மாதம் முன்பு வெளியாகி தோல்வி அடைந்து இருந்தது . பல பேர் செண்டிமென்டை காரணம் காட்டி அதை எடுத்து சொல்ல எவர் பேச்சையும் கேட்காமல் ஜெயம் என்று பேர் வைத்து வெளியிட்டு வெற்றி அடைந்தார் . எடிட்டர் மோகன் இப்போது அதே பாணியில் மணிரத்தினமும் தக்காளியின் தோல்விப்பட தலைப்பை விக்ரம் வைத்து இயக்கும் படத்துக்கு சூட்டப்போகிறாராம் . வாழ்த்துக்கள் ! மணி சார் !
Image
புரட்ச்சிதளபதியின் அப்பா ஜி . கே . ரெட்டி அவர்களை பார்த்து கதை சொல்லப்போனாராம் நவ்தீப் ஷீலாவை வைத்து படம் இயக்கிய இயக்குனர் . வரவேற்று இரண்டு மணிநேரத்துக்குமேல் மனம் விட்டு பேசிய ரெட்டி அவர்கள் , விஷாலை ஹீரோவாக்க தான் பட்ட கஷ்டங்களை வேதனையோடு கூறினாராம் . முதன் முதலில் தமிழ்நாட்டின் பழம் பெரும் நிறுவனமான உலக உருண்டை கம்பெனியில் , நான் பைனான்ஸ் பண்ணுகிறேன் என் பையனை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என்றாராம் . அவர்கள் நாங்கள் புதுமுகங்களை வைத்து நாங்கள் படமேடுப்பதில்லை என்று மறுத்து விட்டார்களாம் . பின் சூப்பர் கம்பெனியின் வடநாட்டு தயாரிப்பாளரை அணுகினாராம் . அவர் நீங்க பணம் கொடுப்பிங்க படம் ஓடலன்னா என் கம்பெனிக்கு கெட்ட பெயர் வரும் என மறுத்து விட்டாராம் . பிறகு இப்போது போண்டியாகி உள்ள ரத்தினமான தயாரிப்பாளரிடம் போனாராம் ( இருவரும் தெலுங்குக்காரர்கள் வேறு ) அவர் மகனை வைத்து ஒல்லிப்பிச்சானின் அண்ணன் இயக்கி ய படம் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த நேரம் . ரெட்டி யை பார்த்து ரத்தினம் இவன் மூஞ்சியை எல்லாம் தமிழ் ந
Image
பந்தயம் கதை விவாதம் நடந்தபோதே இந்த படம் எடுக்க வேண்டாம் என்று தனது தந்தையிடம் எவ்வளோவோ சொல்லிப்பார்த்தாராம் விஜய் . கேட்காமல் படத்தை எடுத்து வெளியிட்டார் எஸ் . ஏ . சி . இப்போது படம் பப்படம் ஆகியுள்ளதால் , அப்பாவின் மீது கடும் கோபத்தில் இருக்குறாராம் இளையதளபதி !
Image
தமிழ் இயக்குனர் ஒருவர் மறுபடியும் , ஆந்திர பூமியில் வெற்றி கொடி நாட்டி உள்ளார் . காதல் கிசு , கிசு படத்தில் நடித்த பாலாவின் அண்ணன் கேமராமேன் சிவா ஜெயம் கோபிசந்தை வைத்து " சவுரியம் " என்று ஒரு படம் இயக்கினார் . போனவாரம் ரிலிசான அந்தபடம் வெற்றி கரமாக ஓடுகிறதாம் . வாழ்த்துக்கள் சிவா . தம்பி மலையாளத்துல கலக்குறார் , நீங்க ஆந்திராவுல கலக்குறீங்க . ( பாலாவும் , சிவாவும் மாட்டுக்காரவேலன் படத்தை எடுத்த ஏ , கே . வேலன் அவர்களின் பேரர்கள் )
Image
" ஏகன் " தீபாவளிக்கு வரவேண்டும் என்று மும்முரமாய் உழைக்கிறார்கள் . ஒருபக்கம் படத்தொகுப்பு நடந்து கொண்டிருக்க , " டி ஐ " என்று சொல்லப்படும் " கிராபிக்ஸ் " வேலைகளுக்காக ஒவ்வொரு ரீலாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கலாம் . என்ன அவசரமாய் வேலை செய்தாலும் தீபாவளிக்கு வராது என்று சொல்கிறார்கள் . ஒரு வேலை வந்தால் அவசரத்தில் சுட்ட அப்பம் போலிருக்கும் என்றார் ஒரு கோலிவுட் கோவிந்தன் ! ( தல அவசப்படதிங்க தல தீபாவளி போனா என்ன உங்க படம் ரிலிஸ் அகிரா அன்னுக்குதான் உங்க ரசிகர்களுக்கு தீபாவளி )
Image
சிலம்பாட்டம் படத்தில் இடைவேளை சண்டைக்காட்சியில் அமைந்துள்ளது . அய்யர் பையனாக இருக்கும் சிம்பு வும் , அவர் தந்தையும் , பிண்டம் வைத்துகொண்டிருக்க , தெலுகு நடிகர் காட்டுராஜ் சிம்புவின் தந்தையை தாக்குகிறார் , இதைப்பார்த்து கொதிக்கும் பிரபு காட்டுராஜாவின் ஆட்களுடன் மோதுகிறார் , இடையில் அவர் மாட்டிக்கொள்ள சிம்புவின் அப்பாவை கொல்ல , காட்டுராஜா கத்தி எடுக்க ஆவேசமான சிம்பு அவர்கையை ப்பற்றி தூக்கி அடிக்கிறார் அனைவரும் திகைக்க அனைவரையும் அடித்து , துவைக்கிறார் . பிரபுவும் , மற்றவர்களும் திகைக்க மீசைவைத்த புலி போல் தெரிய , அய்யர் சிம்புவும் ஒரே திரையில் வர இடைவேளை . சிம்பு இந்த சண்டைகாட்சி எடுத்த பொது முழு ஒத்துழைப்பு தரவில்லையாம் . காட்சி அருமையாக வந்திருப்பதால் மறுபடியும் நடித்து கொடுக்கிறேன் என்று சிம்பு சொல்ல , யூனிட் பொள்ளாச்சி போயிருக்கிறது . பாக்கு மரங்களுக்கிடையில் சண்டை காட்சியாம் . தீபாவளிக்கு சிம்பு சிலம்பு ஆடுவதே சந்தேகம்தானாம் . ( முக்கியமான விஷயம் இந்த மாற்றமெல்லாம் கார் விபத்துக்கு அப்புறம் தானாம் )
Image
பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் , சினிமாவை கேலி செய்து எழுதிக் கொண்டிருந்தார் . இப்போது பலபடங்கள் திரைக்கதை . வசனம் எழுதிய பின் என்ன மாற்றத்தை செய்தார் என்று தெரியவில்லை ? சினிமாவுக்கு வரவேண்டும் என்று , சினிமாவைப்பற்றி , சினிமா உலகம் பற்றி எதையாவது எழுதிவிட்டு , சினிமாகாசு வந்ததும் , அதை மறந்து விடுகிறார்கள் . விநோதமானவர்கள் !
Image
" மர்ம யோகி" படம் பற்றிய செய்திகளை , கமல் மர்மமாகவே வைத்திருக்கிறார் . ஒரு சின்ன தகவல் சொன்னார்கள் . " தசாவதாரம் " படத்தில் அரசர்காலத்தை யும் , சமகாலத்தையும் , படம் பிடித்தது , மக்களுக்கு பிடித்து போனதால் , இந்த மர்மயோகியிலும் , அதை தொடர்கிறாராம் . சங்கர் தன் " எந்திரன் " படத்துக்கு இரண்டு பாடல் காட்சிகளை வெற்றி கரமாக எடுத்து முடித்து விட்டாராம் . எப்போதும் தன் இஷ்டத்துக்கு வேலை செய்யும் சங்கர் இந்த படத்தை அடுத்தவருடம் ஏப்ரலில் , வெ ளியிட முடிவு செய்து தீவிரமாக உழைக்கிறாராம் .