Posts

Showing posts from October 5, 2008
Image
சமீபத்தில் எனது மின் அஞ்சல் முகவரிக்கு வந்த மடல்! பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!! கடவுளிருந்தால் சாத்தான் ஏன்? ************ ********* ********* ********* **** ஒரு நல்ல தகப்பன் தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதைச் சுற்றிலும் கைபிடிச் சுவர் கட்டாமல், தன் குழந்தை புத்தி இருந்தால் ஜாக்கிரதையாக நடக்கட்டும், இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா ? அது போல ஒரு நல்ல கடவுள் சாத்தான்களை ( தீமைகளை) உண்டாக்கிவிட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகளைப் புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பி பிழைக்கட்டும், இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் விழட்டும் என்று சொல்லுவானா?? ( 23.10.1943 - குடி அரசு இதழ்) அன்புடன், அன்பு, அமீரகத்திலிருந்து... .
Image
இலங்கைத்தமிழனின் வேதனைகள் மலையாளிகளுக்கு கேலி பொருளானது ? ஏன் மவுனம் தமிழர்களிடம் ? சமீபத்தில் லங்கா என்ற மலையாளப்படம் பார்த்தேன்.சுரேஷ்கோபி,மம்தா மோஹன்தாஸ் (அது பழைய படம்தான்)படம் பார்க்க,பார்க்க மனம் வலித்தது,நமது பக்கத்துக்கு மாநிலக்காரர்கள்,அவர்களின் அத்தியாவசிய தேவை நம்மை நம்பி இருக்கிறது,ஆனால் அவர்கள் சிங்களன் நல்லவன்,தமிழன் மோசமானவன் என்று படம் எடுத்து,அதை இந்தியாவில் தணிக்கை செய்து திரையிட்டு உள்ளார்கள்.இலங்கை தமிழர்களின் இனபோராட்டம் மலையாளிகளுக்கு வில்லத்தனமாக தெரிகிறது,இடையில் தங்கையை ஹீரோவுடன் விபசாரத்துக்கு அனுப்பி வைக்கும் மாமா வேலையையும் தமிழன் பண்ணுவதாக காட்சி யமைத்து இருக்கிறார்கள்.ஏன் இதை எந்த தமிழனும் தட்டி கேட்கவில்லை?அந்த படத்துக்கு தொழில் நுட்ப வேலைகள் சென்னையில் நடந்துள்ளது.ஒரு சிங்கள இயக்குனர் சென்னையில் படம் எடுத்து லேப்க்கு பிரிண்ட் போட வந்த போது தடுத்த தமிழ் திரையுலகம் பக்கத்தில் உள்ள மாநிலத்துக்காரன் கேவலப்படுத்தியதை பொறுத்து கொண்டது ஏன்?வெட்ககேடு?? தமிழச்சி தன் எதிரியுடன் படுத்து காரியம் சாதிக்கிறாள். சமீபத்தில் தட்ஸ் தமிழில் எழுதியது இந்த படத்தை பார்த்
Image
தமிழ் மக்களுக்கு ரஜினி துரோகம் செய்து விட்டதால் . மக்கள் அவரை வெறுத்து விட்டார்கள் . இனி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று ஓட்டெடுப்பு நாம்தான் முதலில் நடத்தினோம் . பின் ஆனந்த விகடன் , ராஜநாயகம் ஆகியோர் தமிழ்நாடு மொத்தமும் கருத்து கணிப்பு நடத்தி நாம் நடத்திய ஓட்டெடுப்பின் சாரத்தை அப்படியே சொன்னார்கள் . நமது ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு ஒட்டு போட்டது நாற்பத்து இரண்டு பேர்தான் . இருபத்து எட்டு பேருக்கு மேல் விஜய் தான் என்றும் , பத்து பேர் மட்டுமே எப்போதும் ரஜினி என்று ஒட்டு போட்டார்கள் . இதை குறிப்பிட காரணம் இன்றைய ரிப்போர்ட்டரில் ரஜினி செல்வாக்கு குறைந்தது பற்றி எழுதியுள்ளார்கள் . மூல காரணம் தமிழ்ராஜா . டி . கே வலைப்பூ என்பது நமக்கு சந்தோசம்தானே அதுதான் . கலந்து கொண்ட , ஒட்டு போட்ட அனைவருக்கும் மறுபடியும் நன்றிகள் .
Image
ஹிந்தி கஜினி முடிந்து விட்டது. ஆகையால் சூர்யாவை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு கதை தயார் பண்ண உதவியாளர்களுடன் கொடைக்கானல் போயிருக்கிறாராம் முருகதாஸ் . இந்த படத்தில் சமூகம் , மனித நேயம் , போன்ற கருத்துகளை அழுத்தி சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கிறாராம் . ( அசத்துங்க முருகதாஸ் )
Image
தனக்கு தேவதையை கண்டேன் , திருவிளையாடல் படங்களின் மூலம் ஹிட் கொடுத்து வெற்றி ஹீரோ வாக்கிய பூபதி பாண்டியனை அவமதித்து விட்டாராம் தனுஸ் இனிமேல் தனுசை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று புலம்பிய பூபதி பாண்டியன் . தனுஸ் எல்லாம் ஹீரோவாக ஆகமுடியும் பொது என் தம்பிக்கு என்ன குறைச்சல் என்று தம்பியை ஹீரோவாக்கி படம் ஆரம்பித்து விட்டார் . சொந்த காசில இல்ல அடுத்தவன் காசில மாட்டியது திருச்சி விநியோகஸ்தர் ஜின்னா . அவர்தான் நானும் என் சந்தியாவும் படத்தை தயாரிக்கிறார் . யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் கம்போசிங் நடக்கிறது !
Image
ரம்யா கிருஸ்ணன் மறுபடியும் நடிக்க வந்தது , அவர் கணவர் கிருஸன வம்சிக்கு பிடிக்கவில்லையாம் . கணவரிடம் போராடி எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தாராம் . பரத்துடன் நடிக்கும் ஆறுமுகம் படம் தவிர , இன்னும் இரண்டு படங்களில் நடிக்கிறாராம் . பெரும்பாலான இயக்குனர்கள் ஆண்டி மேல் ஆசைப்படும் விடலைப்பையன் கதைகளாய் சொல்கிறார்களாம் ! ( ஒருவிழாவில் மகனுடன் )
Image
நியுட்டனின் மூன்றாம் விதி படத்துக்காக தெலுங்கில் தான் பவன் கல்யானை வைத்து இயக்கும் , புலி படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்து விட்டு தேதிகள் கொடுத்துள்ளாராம் எஸ் . ஜெ . சூர்யா . படம் தீபாவளிக்கு வந்தாலும் வந்து விடும் என்று கூறுகிறார்கள் .
Image
" இளவட்டம் " படத்தின் மூலம் ஏ . ஆர் . கே . ராஜராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஷீலா தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் , எதுவும் ஓடவில்லை . தெலுங்கில் சிரஞ்சீவியின் மைத்துனர் , அல்லு அரவிந்த் மகன் , அல்லு அர்ஜுனுடன் " பருகு " என்ற படத்தில் நடித்தார் . படம் சூப்பர் ஹிட் இப்போது நாற்பத்து ஐந்து லட்சம் சம்பளம் கேட்கிறாராம் !
Image
பிரீத்தி யை கல்யாணம் செய்து விஜயகுமார் வீட்டு மருமகனாகிப்போன , இயக்குனர் ஹரி தன் மைத்துனர் அருண் விஜயை ஹீரோவாக்கி படம் இயக்க சொல்லி மாமனார் விஜயகுமார் கேட்டபோது மறுத்து விட்டார் . பரத்தை விட என் மகன் குறைந்து போய் விட்டானா ? என்று குமுறிக்கொண்டு இருக்கிறாராம் விஜயகுமார் .
Image
சிலுவை போட்ட செயின் வாங்கி கொடுத்து கழுத்துல போட்டு சுத்துனது , கார்ல மணி கணக்கா டிஸ்கஸ் பண்ணியது எல்லாம் , மறந்து போச்சு ! இனி நமக்குள்ள என்ன பேச்சு !???
Image
பேஸ் புக்கில் உதயநிதி ஸ்டாலின் என்று கொடுத்திருந்த பெயரை குமுதம் பத்திரிகை வெளியிட்டபின் , நிறைய பேர் நட்புக்கு விண்ணப்பம் போட்டார்களாம் . இதில் கடுப்பான உதய நிதி தன் பெயரை அந்த தளத்தில் மட்டும் உதயநிதி பொய்யாமொழி என்று மாற்றி விட்டாராம் ! ( பணம் கேட்டா மறுக்கலாம் நட்ப கேட்டா கூடவா ?)
Image
தன்னை ஹாலிவுட் காரர்களின் மறு பிறப்பு என்பது போல் பேசித்திரியும் கவுதம்மேனன் நிறைய கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு படம் பண்ணிதராமல் இழுத்தடிக்கிறாராம். இது பணம் கொடுத்தவர்களின் குற்றசாட்டு. (ஆமா வேற எவனுமே இங்க இல்லையா உங்களுக்கு அத்தனை பெரும் அந்த பந்தா பார்ட்டி பின்னால போயிட்டு இப்போ குறை சொல்றீங்க??? (இதில் ரஜினி பொண்ணு , சிவாஜி பிலிம்ஸ் எல்லாம் அடக்கம்)
Image
பிதுங்கி வழிகிறது ! முமைத் கானின் கால்சீட் டைரி . தெலுங்கில் இவரின் குத்துப்பாட்டு இருந்தால் போதும் படங்கள் பிச்சிக்கிட்டு போகும் என்று , நம்பி எல்லாப்படங்களிலும் போடுவதால் , ஒருநாளைக்கு ஐந்து லட்சம் வாங்குகிறாராம் நடிக்க .! இப்போது இவர் மேல் கமலுக்கு மையல் . மர்ம யோகியில் நடிக்கும் கதாநாயகிகள் பட்டியலில் இப்போது முமைத்கானும் !
Image
கதைக்காமல் விடுவதால் அழிந்து போவதற்து தமிழொன்றும் நேற்றோ, இன்றோ பிறந்த மொழியா ????? / / /ஆபிரகாமின் வழி தோன்றல்கள் யூத,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை தோற்று வித்து கடவுளை உருவாக்கு முன்னே நாகரீகத்துடனும்,பண்போடும்,பிற மனிதனை நேசித்தும் வாழ்ந்த நாங்கள் தமிழர்கள்..!!!! உலகில் எந்த மனித இனத்துக்கும் இல்லாத நல்ல பண்புகளை உடையவர்கள் நாங்கள்!!!!! எங்களை பார்த்தே எதிரியை மதிக்கும் பண்பு முஹம்மது நபிக்கு உருவானது!! நாங்கள் உலகில் உயர்ந்தவர்கள்... தமிழர்கள் என்று எங்களுக்கு பெயர்!!!
Image
ரஜினி அரசியலுக்கு வருவார் நாம் பெரிய ஆளாவோம் என்று நம்பி வாழும் ரசிகர்கள் ! முட்டாள்கள் என்றார் என் நண்பர் ! உண்மையா ??? ஒட்டு போடுங்கள் !!
Image
போன தீபாவளிக்கு ஜெ . எம் . ஆர் . டி நிறுவனம் வேல் ப டத்தை பங்கஜ் மேத்தாவிடம் இருந்து , வட ஆர்க்காட் மாவட்டத்துக்கு ஐம்பத்தாறு லட்சரூபாய்க்கு வாங்கி வெளியிட்டனர் . அந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் ஹிட்டான வேல் படம் நார்த் ஆர்காட் ஏரியாவில் மட்டும் நஷ்டமாகி ( ஆறுலட்சம் ) பெயிலியர் ஆனது . ( ரிலிஸ் பண்ணியவர் மாலி எனும் ஒரு முன்னாள் தக்காளி சீனிவாசனின் மேனேசர் ) அது அப்படி இருக்க இந்த தீபாவளிக்கு ரிலிஸ் ஆகும் சேவல் ப டத்துக்கு நார்த் ஆர்காட் ஏரியாவுக்கு எழுபத்து ஐந்து லட்சம் கேட்கிறார்கள் . எப்படி இருக்கு ???? கொடுமை வேல் படத்தில் சூர்யா , அசின் இருந்தார்கள் , இதில் பரத் தவிர யார் இருக்கிறார்கள் பரத்தின் பழனி படம் நார்த் ஆர்க்காட் ஏரியா இருபத்து ஒரு லட்சம் மட்டும்தான் .
Image
கடந்த இரு நாட்களாய் பத்திரிகைகளில் படிக்கும் ஒரு செய்தி ரொம்பவும் கஷ்டமாய் இருக்கிறது . விஜயகாந்த் தற்போது நடித்துவரும் படத்தில் அவருக்கு தாயாக நடிக்க சுகன்யாவை கேட்டபோது மறுத்து விட்டாராம் . இதுதான் அந்த செய்தி அதில் எனக்கு என்ன கஷ்டம் என்று கேட்கிறீர்களா ? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விஜயகாந்த் சுகன்யாவை அம்மா வேசத்துக்கு அழைக்கலாமா ? சுகன்யா இன்னும் இளமை மாறாமல் இருக்கிறார் . தொப்பைய எல்லோரும் வயித்தில வளப்பாங்க ! விஜயகாந்த் அத முகத்துல வளத்து வச்சிருக்கார் . இந்த லச்சணத்துல இளவயசு அம்மா இவருக்கு ! ஒரு வேலை சுகன்யா சம்மதிச்சு நடிச்சிருந்தா கேவலமாயிருந்திருக்கும் . ( அதான் முதல்வர் கனவுல இருக்காரே அப்புறம் ஏன்சார் நடிச்சு கொடுமைப்படுத்துரார்னு ஒருநண்பர் கேட்டார் நான் என்ன பதில் சொல்ல வேதனை )
Image
தமிழ்சினிமாவில் பல பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பொன்குமார் . ராகவா லாரன்சிடம் ஒருகதை சொன்னார் கதை பிடித்து போன தால் , லாரன்ஸ் அவரை ஹிதேஷ் ஜெபக்கிடம் அழைத்து போய் இந்த கதையை நீங்கள் தயாரியுங்கள் நான் நடிக்கிறேன் . என்று படத்துக்கு வேட்டு என்று பெயர் வைத்து ஆரம்பித்து விட்டனர் . கதாநாயகி வேட்டையில் இருக்கும் பொது பந்தயம் படம் வெளியானது . படத்தை பார்த்து விட்டு வந்த உதவி இயக்குனர் வேட்டு கதை போலவே பந்தயம் கதையும் இருக்கிறது என்று சொல்ல அனைவரும் சென்று படம் பார்க்க உதவி இயக்குனர் சொன்னது உண்மை என்பது சதவிகிதம் சீன்கள் கூட அப்படியே இருந்ததாம் . அதிர்ச்சியில் அழுதே விட்டாராம் பொன்குமார் . என்ன செய்வது என்று தெரியாமல் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டு வேறுகதை தயார் பண்ணுகிறார்களாம் . ( கொடுமை )