இந்த உலகத்தில் உடனடியாக சமரசம் செய்து கொள்ளும் சமரசவாதிகள் யாரும் சரித்திரம் படைப்பதில்லை. இலட்சியவாதிகள்தான் இலக்கை அடைகிறார்கள். அப்படிதான் சினிமாவிலும் தங்களை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள் இயக்குநர்கள் பாலா, அமீர் இவர்களது பள்ளியிலிருந்து வந்துள்ள நானும் அப்படிதான் என்று எடுத்தவுடனே தடாலடியாக பேசுகிறார் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் இயக்குநர் சசி குமார்.

"அது என்ன சுப்ரமணியபுரம்?" அவரிடமே கேட்டபோது..மதுரையில் சுப்ரமணியபுரம்தான் கதைக்களம். இங்குதான் கதை நிகழ்கிறது. சுப்ரமணியபுரம் என்கிற பெயர் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை என்று பல ஊரிகளில் இருக்கிறது. அதனால்தான் படத்திற்கு இப்பெயரை சூட்டினோம்.


Comments

Popular posts from this blog