சில பத்திரிக்கையாளர்களும் , பிளாக் பதிவர்களும் , இன்னும் சில புத்திசாலிகளும் நினைப்பது போல் ஜெ.கே.ரித்திஷ் காமெடியான,கேவலமான ஆள் இல்லை என்றுதோன்றுகிறது. ஒருவனின் கஷ்டத்தை கண்முன்னால் பார்த்தாலே உதவ தயங்கும் கபோதிகள்மத்தியில் (நான் இப்படி வார்த்தை பிரயோகித்ததில்லை ஆனாலும் முடியவில்லை) எங்கோ பேப்பரில் படித்த ஒரு இயக்குனரின்மனம் பிறழ்ந்ததால் அவர் மனைவி படும் கஷ்டத்தை புரிந்து யாருக்கும் சொல்லாமல் சென்று ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து உதவி அதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சினை தீர உதவியவன் உங்களுக்கு கிண்டல் பொருளா? மேலும் அவன் முகம் உங்கள் எண்ணப்படி அழகில்லாமல்,குள்ளமாய் இருப்பதாக நீங்கள் நினைப்பதால் கிண்டலாக தெரிகிறதா? உங்கள் மனம்,அழுக்காய்,ஊனமாய் இருப்பது உங்களுக்கே தெரியவில்லை? அவன் கொடுக்கும் எண்ணமுள்ளவனாய் இருப்பதால் புகழ்ந்து பிழைப்பவர்கள் அவனை சுற்றி இருக்கிறார்கள் அது அவன் பிழையா? இங்கே ரசிகனின் பணத்தை வசனம் பேசி நடித்து கொள்ளையடித்தவர்கள் வெளி மாநிலங்களிலும்,நிலங்களிலும் தம் சந்ததிக்கு சேர்த்து வைக்கிறார்கள். இவன் ஒருவனாவது கொடுக்கிறானே! அதற்காக புகழவேண்...
Popular posts from this blog
படித்தது உங்கள் கருத்துக்காக நன்றி :www.softeccomputer.com இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துகிறோமா? ஏன்?? ஆணை ஆண் புணரும் மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா? ``கடவுள் இல்லை என்பவர்கள் இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துவதா?’’ (`தினத்தந்தி’ ) இப்படியொரு கேள்வியை பா.ஜ.க., தலைவர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்! இப்படி எத்தனையோ கிருஷ்ணர்கள் கேள்விகள் என்ற பெயரிலே மூடர்கள் சிலர்முன் முழங்கி விட்டுப் போகிறார்கள்! தந்தை பெரியார் காலந் தொடங்கி இன்று தமிழர் தலைவர் அவர்களின் அறிவார்ந்த சுனாமி அலைவீச்சின்முன் இன்று வரை ``இதோ நான் காட்டுகிறேன்’ -நான் மறுக்கிறேன்’’ என்று எந்த மார்தட்டும் வீரரும் வந்ததில்லை! இந்துக் கடவுள்கள் எல்லாம் வல்லவர்கள் ஆயிற்றே! அவர்களிடம் ``அவர்கள் தலையில் இடியைப் போடு இந்திரனே!’’என்று வேதங்களில் எழுதி வைத்திருக்கிறீர்களே! அப்படியே விட்டுவிட வேண்டியது தானே? ...
இந்த பதிவில் ஒரு சிறு திருத்தம் போன இரண்டுவாரங்களாக பசங்க படம் பிக்கப் ஆகி நல்ல வசூல் செய்கிறது ! சமீப காலமாய் தமிழ்சினிமா ரசிகர்களின் மனநிலையை கணிக்க முடியாமல் திணறுகிறது தமிழ் திரையுலகம். அருந்ததி , அயன் படங்களுக்குப்பின் - நியுட்டனின் மூன்றாம் விதி , பசங்க, சர்வம் , மரியாதை , ராஜாதிராஜா , சுப்ரமண்யம், இவன்தாண்டாபோலிஸ் ,போன்ற டப்பிங் படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இதில் அயன்,அருந்ததி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூலையும் வாரி குவித்தது. மரியாதை தனது மரியாதை காப்பாற்றி கொள்ளும் அளவுக்கு வசூல் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் மற்ற படங்கள்? நியூட்டனின் மூன்றாம் விதி ,பசங்க இரண்டு படமும் நல்ல பாராட்டை பெற்றன ஆனால் வசூல் டப்பிங் படங்களைவிட மோசம். பில்லாவுக்கு பின் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஏக எதிர்பார்ப்போடு ஆர்யா,திரிஷா நடித்து வெளிவந்த சர்வம் படம் வசூலில் சர்வ நாசம் என்றார் ஒரு விநியோகஸ்தர். இது போக சுயவிளம்பர பிரியரான நடன இயக்குனர் லாரன்ஸ் நடித்து வெளிவந்த ராஜாதிராஜா படமும் பப்படம் ஆகிவிட்டது .இந்த படத்தை மும்தாஜ்க்கா...

Comments